சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று 2-வது நாளாக சந்தித்து வருகிறார். நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று தமது ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு குடும்பமே மிக முக்கியமானது. ரசிகர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், தமது அரசியல் பிரவேசம், நிலைப்பாடு தொடர்பாக இன்னும் 4 நாட்கள் காத்திருங்கள் என்றார்.
முன்னதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், தமது அரசியல் பிரவேசம், நிலைப்பாடு தொடர்பாக இன்னும் 4 நாட்கள் காத்திருங்கள் என்றார்.